Monday, September 23, 2013

இட்லி


​.

இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? 

இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்

​மி
ல் சில பேருக்கு
​த் ​
தெரியாது
​.​

இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற
வைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில்
இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படு
​த்தப் பட்டுள்ளன .​


அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.

இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில்
ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில்
கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது
இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால்
பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,

ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின்
அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது
வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.

அதற்காக அதிகமாக சாப்பிடக்கூடாது
​.​
அளவாகத்தான் சாப்பிட வேண்டும்
​ ​
3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லத
​ல்ல.​
எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.

எனவே இட்லி,தோசை
​ வகைகள் ​
அரிசி
​மற்றும் ​
கோதுமை சாதத்தை
விட
​ ​
தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.









--
FOR MORE INFORMATIVE MAILS VISIT

மஞ்சளின் மருத்துவ குணம் !!!






"மஞ்ச
​ளை ​
ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அது தெரியாதவர்களுக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் "

நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது 'ஆஸ்டியோபோரசிஸை' (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.


இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.

மஞ்சள் (மூலிகை) மகிமை

மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் 'குர்மின்ங்' என்ற நிறமி இருக்கிறது.மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் 'ஆலப்புழை மஞ்சள்' உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

மஞ்சளின் வகைகள்:
1. முட்டா மஞ்சள்
2. கஸ்தூரி மஞ்சள்
3. விரலி மஞ்சள்
4. கரிமஞ்சள்
5. காஞ்சிரத்தின மஞ்சள்
6. குரங்கு மஞ்சள்
7. காட்டு மஞ்சள்
8. பலா மஞ்சள்
9. மர மஞ்சள்
10. ஆலப்புழை மஞ்சள்

மஞ்சளின் இயல்புகள்:

முட்டா மஞ்சள்

இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.

கஸ்தூரி மஞ்சள்:

இது வெள்ளையாக , தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

விரலி மஞ்சள்:

இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

மஞ்சளின் பயன்பாடுகள்:

சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.

*பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

*சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.

*உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

*பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.

*வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.

*இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.

*நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ குணங்கள்:

1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
*
2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
*
3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
*
4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
*
5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
*
6. "மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்".
*
"மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்".
*
7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்". தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
*
8. "மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்"
*
9. " மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்"

10. "மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்"

11. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.

12. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.

13. பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.

14. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.


15. மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.


மேலும் சில தகவல்கள்:


1. மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

2. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.


3. மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.


4. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.



FOR MORE INFORMATIVE MAILS VISIT

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு




ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

​வும் .​



நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!







FOR MORE INFORMATIVE MAILS VISIT

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்






மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.



--
FOR MORE INFORMATIVE MAILS VISIT

Sunday, September 22, 2013

சந்திரகலை என்றால் என்ன?












சந்திரகலை என்றால் என்ன?




இடது நாசி(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசி(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.



இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய
இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.


ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.






​.



--
FOR MORE INFORMATIVE MAILS VISIT

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?



​.




செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?



சிட்டுக்குருவிகள் ஏன் குறைந்து விட்டன? எங்கள் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டிலேயே கூடி கட்டி அமோகமாக இனப்பெருக்கம் செய்துள்ளன. இன்றைக்குச் சிட்டுக்குருவிகளைப் பார்க்கவே முடியவில்லையே. இதற்குக் காரணம் செல்போன் கதிர்வீச்சுதான்...
இந்தத் தகவல் நிச்சயம் உங்கள் காதுக்கும் வந்திருக்கும். எல்லோரும் செல்போன் பயன்படுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெரிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆனால் சிட்டுக்குருவிகள் ஏன் அழிந்தன என்ற கேள்வியை 10 பேரிடம் கேட்டால், அதில் 8 பேர் செல்போன் கோபுரங்கள்தான் காரணம் என்று அழுத்தமாகக் கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே சிட்டுக்குருவிகள் அழிந்ததற்குக் காரணம் என்ன? செல்போன் அலைகள் வேறு என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
செல்போன் அலைகள் சிட்டுக்குருவிகளின் முட்டைகளை சிதைப்பதால், அவற்றின் எண்ணிக்கை சரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர் சிட்டுக்குருவிகள் அழிவைப் பற்றி பிரபலப்படுத்திய பூனேயைச் சேர்ந்த முகமது திலாவர். மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் நடைபெற்ற சில ஆராய்ச்சிகளை முன்வைத்து அவர் இந்தக் கூற்றை முன்வைத்தார். அந்த ஆராய்ச்சிகள் வல்லுநர்களால் மறுஆய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இல்லை. கேரளம், அசாம் பல்கலைக்கழகங்களும் இதே காரணத்தை முன்வைத்தன.
செல்போன் அலைகள் என்பவை டிவி, மைக்ரோவேவ் அவன் போன்ற வற்றில், வெளியாகக் கூடிய சிற்றலை மின்காந்த கதிர்வீச்சு வகையைச் சேர்ந்தவை. இவை உடல்நலனை பாதிக்கலாம் என்ற குற்றச்சாட்டை சமீபத்திய ஆய்வுகள் சந்தேகிக்கின்றன. எக்ஸ்ரே கதிர்வீச்சு போன்றவை நீண்டகாலத்துக்கு உடலில் பட்டால், அவற்றிலிருந்து வரும் ஆற்றலை திசுக்கள் கிரகித்துக்கொண்டு மரபணு கட்டமைப்பு மாறக்கூடும். இதனால் உடலில் குறைபாடான வளர்ச்சி ஏற்படலாம். ஆனால், நுண்ணலை களோ, ரேடியோ அலைகளோ பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்குத் திறனைக் கொண்டிருப்பதில்லை.
இந்நிலையில் செல்போன் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை பாதிப்பதில்லை என்று கோவை அனைக்கட்டியில் உள்ள சாலிம் அலி பறவையியல், இயற்கை அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது தொடர்பாக கூடுதல் ஆராய்ச்சி களையும் மேற்கொள்ள இருக்கிறது.
சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கதிர்வீச்சைத் தாண்டி உணவு கிடைக்கும்தன்மை, கூடுகட்டும் இடங்கள் போன்றவை குறைந்துவிட்டதே முக்கியக் காரணம்.
நகர்மயமாக்கம் காரணமாகச் சிட்டுக்குருவிகளின் வாழிடம் அதிவேகமாக அழிந்துவிட்டன. மேலும் இப்போது தானியங்கள் ஞெகிழிப் பைகளில் வருவதால், குருவிகளுக்கு தானியங்கள் கிடைப்பதில்லை. குருவிக் குஞ்சுகளிகன் அதிவேக வளர்ச்சிக்குத் தோட்டங்களில் கிடைக்கும் புழு, பூச்சிகள்தான் முக்கிய உணவு. பூச்சிக்கொல்லிகள் அதிகரிப்பு, புழு பூச்சிகளைக் குறைத்துவிட்டது. இப்படியாக குஞ்சுகள் முதல் வளர்ந்த குருவிகள் வரை உணவு கிடைக்காமல் போவதாலேயே குருவியின் இனப்பெருக்கம் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றன.
எனவே, சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு செல் போனை வந்தடையும் கதிர்வீச்சோ, செல்போன் கோபுரங்களில் வெளியிடப்படும் கதிர்வீச்சோ நேரடிக் காரணம் என்று இதுவரை நிறுவப்படவில்லை.
மனிதர்களுக்கு என்ன பாதிப்பு?
சிட்டுக்குருவிகள் இருக்கட்டும். செல்போன் கதிர்வீச்சால், மனித உடல்நலனுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இதுபற்றி இரண்டு விதமான வாதங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன.
செல்போன் கதிர்வீச்சு அதிக காலம் உடலில் படுவதால், மரபணு மாற்றத்தில் பங்காற்றுவதாகவோ, புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்குவதாகவோ இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் நிறுவவில்லை. செல்போன் கதிர்வீச்சு, சீரமைக்க முடியாத உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
"நமது மூளைச் செயல்பாடுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. மின்காந்த அலை களான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இதனால் செல்போன் கோபுரங்கள் அருகே வாழும் மக்களுக்கு தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேநேரம், இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள், ஏற்படுவதை உறுதிப்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகள் இன்னும் நடக்க வில்லை. செல்போன் கதிர்வீச்சு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏன் இதுவரை முறைப்படி நடத்தப்படவில்லை என்பதும் சிந்தனைக்குரியது," என்கிறார் புதுவையைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளர்.
செல்போன் நிறுவனங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள் செல்போன் கதிர்வீச்சின் பாதகங்கள் பற்றி போதுமான அறிவியல் ஆய்வுகள் இல்லை என்று கூறினாலும், அதிகப்படியான செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பாக சாதாரண மக்களும் உணரும் விஷயம், கேட்கும் தன்மை.
மேலும், "செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை பல நாடுகள் கடுமையாக்கி உள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு அருகே வாழ்வது என்பது மைக்ரோவேவ் அவனுக்குள் நாம் வாழ்வதைப் போன்றது. மும்பையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் ஒருவர், அதில் 90 சதவிகித நேரம் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார், என்று பம்பாய் ஐ.ஐ.டி. மின் பொறியியல் பேராசிரியர் கிரீஷ் குமார் உள்ளிட்டவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்," என்று குறிப்பிடுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் நித்தியானந்த் ஜெயராமன்.
இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முடியாது. அதேநேரம், செல்போனில் அதிக நேரம் பேசாதீர்கள். ஹாண்ட்ஸ் ஃபிரீ கருவி அல்லது குறைந்த சப்தத்தில் வைத்து பேசுங்கள், நிலவழித் தொலைபேசியில் பேசுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்.
 




 
 

 
 

FOR MORE INFORMATIVE MAILS VISIT

சிரிக்கத் தெரிந்த மிருகம்தான் மனிதன்



.

சிரிக்கத் தெரிந்த மிருகம்தான் மனிதன்








 

                                                       









FOR MORE INFORMATIVE MAILS VISIT

tension

Saturday, September 21, 2013

காபி உடம்புக்கு நல்லதா? கெட்டதா?





காபி உடம்புக்கு நல்லதா? கெட்டதா? சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது?

காபி உடம்புக்கு நல்லதா? கெட்டதா?
சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது?


இதை படிக்கற உங்களுக்கு சந்தோஷமும் வரலாம். தலைச்சுற்றலும் வரலாம், தலை சுற்றுகிறதே என்று டாக்டர்களிடம் போனால், இதை சொன்னதே டாக்டர்கள்தான்.

ஆனால் ஒரு நாளைக்கு 3 அல்லது 5 கப் காபி சப்பிட்டால் ஹார்ட் அட்டாக், புற்று நோய், சர்க்கரை வியாதி, பக்கவாதம் போன்ற நோய்கள் வராதாம்.

இந்த டாக்டர்களே இப்படிதான் அவர்களும் குழம்பி நம்மையும் குழப்ப வைப்பார்கள். "காபி சாப்பிட்டா பிளட் ப்ரஷர் ஆதிகமாயிடும்" என்று அந்தக் காலத்தில் இருந்து நேற்றுவரை சொன்னார்கள். ஆனால் இன்று "காபி சாப்பிட்டா உடலுக்கு நல்லது"எங்கிறார்கள்.

காபியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் உடலுக்குள் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் நோய்களை விரட்டி அடிக்க உதவுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதுதான் இப்போது காபி சாப்பிட்டா உடலுக்கு நல்லது என்பதற்குக் காரணமே.

காபி சாப்பிட்டால்தான் உடலில் புத்துனர்ச்சி ஏற்படுவதாக பலரும் உணருகின்றனர். இதனால் காபி குடிப்போர் எண்ணிகை அதிகமாகி விட்டது. காபி குடிப்பது பற்றி சில மருத்துவர்களிடம் கேட்ட கேள்விகள் இவை.

1, காபி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

"இந்த கேள்விக்கு இன்னும் 100 சதவீதம் சரியான பதில் கிட்டவில்லை ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் வரும் என்ற பீதி இன்றுவரை உள்ளது. ஆனால் கெட்ட்து இல்லை என்றே இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

2, ஒரு நாளைக்கு எவ்வளவு காபி சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காப் வரை சாப்பிடலாம் என்கிறார்கள்.

3, எந்த எந்த நேரத்தில் காபி சாப்பிடலாம்?

காலையில் எழுந்ததும், காலைச் சிறுண்டிக்கும் மதிய உண்வுக்கும் இடையே மாலையில் என்று சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் வராது என்கிறார்கள்.

4, தூங்கப் போகும்போது காபி சாப்பிடலாமா?

இல்லை ஒரு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும். மேலும் தூக்கம் குறைவாக உள்ளவர்கள் காபியை தவிர்ப்பது நல்லது.

5, தலைவலி வரும்போது மாத்திரையுடன் காபி சாப்பிடுகிறார்களே, சரியா? 

தவறு. தலைவலி மாத்திரையை காபியுடன் எடுத்துக் கொள்ளக் கூடாது. தண்ணீர்தான் அதற்கு உகந்தது. மாத்திரைகளின் வீரியத்தை காபி குறைக்கும்.

6, காபியில் பொடியுடன் சிக்கரி சேர்ப்பது நல்லதா?

காபியில் 20 சதவீததிற்கும் குறைவாகவே சிக்கரி சேர்க்க வேண்டும் அதற்குமேல் என்றால் மயக்கம் தரும் பானமாகிவிடும்.

7, காபியில் சர்க்கரை எவ்வளவு சேர்க்க வேண்டும்?

சர்க்கரை அதிகமானால் உடலில் உள்ள பி விட்டமிகளை அப்புறபடுத்திவிடும். அதனால் சர்க்கரை அளவாகவே இருக்க வெண்டும். அதுவும் காலையில் அரை சர்க்கரைதான் உபயோகிக்க வேண்டும்

8, காபியை மிக சூடாக சாப்பிட்டால்தான் சிலருக்குப் பிடிக்கிறதே?

மிகமிக சூடு கூடாது. அது மென்மையான தொண்டைச் சதையை புண்ணாக்கி விடும். மிதமான சூடுதான் நல்லது. அதைவிட முக்கியம் பிரிட்ஜில் வைத்த காபியை எடுத்து சூடு பண்ணி சாப்பிடவே கூடாது. அது செரிமானத்தைக் கெடுக்கும்.

9, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு காபி ஏற்றதா?

காபி சாப்பிடுகிறவர்களுக்கு ஆரம்பகால சர்க்கரை வியாதி வராது என்கிறார்கள். ஆனால் சர்க்கரை வியாத் உள்ளவர்கள் சர்க்கரை போடாமல் காபி சாப்பிட வேண்டும். செயர்க்கை சர்க்கரை {சுகர் பிரி}யை உபயோகிக்கவே கூடாது. பிளாக் காபி இவர்களுக்கு நல்லது.

10, கர்ப்பிணிகள் காபி சாப்பிடலாமா?
  
பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி சாப்பிடுவதுதான் நல்லதாம். பக்கவாதம், நீரிழிவு, கல்லீரல், புற்றுநோய் போன்ற பாதிப்புகளில் இருந்து பெண்களை காபி காக்கும் எங்கிறார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை தேவை.

11, இதயநோய் உள்ளவர்கள் காபியை நிறுத்திவிட வேண்டுமா?

அது நேற்றுவரை இருந்த கருத்து. ஒரு நாளைக்கு 3 கப் காபி குடித்தவர்கள் மற்றவர்களை விட இதய பாதிப்பு 25 சதவீதம் குறைவாகவே உள்ளதாக இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்

12, காபியை அதிகம் சாப்பிட்டால் தலைச் சுற்றல், மயக்கம் ஏற்படுவது உண்டாமே?

அளவுக்கு மிஞ்சினால்தான் அந்த நிலை அளவான காபி தலைச்சுற்றலை தலைவலியையும் மயக்கத்தையும் தவிர்க்கும் என்கிறார்கள்.

13, காபி குடித்தால் கேன்சர் வருமா?

காபி குடித்தால் கல்லீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைவதாக அமெரிக்க நிபுணர்கள் கூறுகிறார்கள்.

14, குழந்தைகளுக்கு காபி தரலாமா?
காபி குழந்தைகளுக்கு குடுக்கலாமா?

பாலின் அளவைக் கூட்டி, காபி பொடியின் அளவைக் குறைத்து காபி போட்டு குழந்தைகளுக்குச் தரலாம். அது குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்படைய வைக்கிறதாம். இரவில் கண்விழித்துக் படிக்கும் மாணவர்களுக்கு காபி நல்லது. அது மாணவர்களை நன்றாக படிக்க வைக்க உதவுகிறது. காரணம் மூளையின் நினைவாற்றல் காபினால் கூடுகிறாதாம்

15, சரி காபினால் என்ன பயன்?

இதயநோய், சுவாசநோய், சர்க்கரைநோய், காயங்கள், விபத்துக்கள், தொற்றுநோய், பக்கவாதம், எலும்புத் தேய்மானம் போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்பை அதிகளவு காபி தடுக்கிறது. மனிதர்கள் நீண்ட நாள் வாழ காபி உதவுகிறது என்பதே இன்றைய ஆராய்ச்சி முடிவு...

நன்றி –
குமுதம் வார இதழ்

23-01-2013 








FOR MORE INFORMATIVE MAILS VISIT

REGISTERED LETTERS..DO NOT SIGN IF.. ....Read to the end! [Lawyers Talk: 8618]



.





 REGISTERED LETTERS..DO NOT SIGN IF.. ....Read to the end! [Lawyers Talk: 8618]




WHITE COLLAR CRIMINALS NEW MODUS OPERANDI

Important information, must read


Subject: REGISTERED LETTERS..DO NOT SIGN IF.. ....Read to the end! [Lawyers Talk: 8618]

Dear all,
Some thing to ponder about when receiving registered letter.

How far have we take the trouble of opening the letter before signing AR acknowledgement slip? Read to find out more....
be cautious.
Open letters BEFORE signing to acknowledge receipt of the AR registered letter !!!!!


Without Prejudice

Folks, the next time the postman or courier guy comes to deliver a
registered letter, a certificate of posting letter or parcel , do the
following :
a) Check who is it from ?
b) If you do not know the source , reject it .

If you accept it without knowing the source , the following has happened and can happen to you too : There have been cases where lawyers have done the following :

a) Mailed empty / sealed AR registered letters to people on behalf of their clients for some court case matter.

b) AR Registered mail , either, consisted of brochures promoting sale of new real estate or some car model or just an empty A4 size paper inside .

In normal circumstances , when one receives an empty letter or junk mail, they will just tear and throw away , BUT BUT , here lies the danger :

a) You signed the AR registered card and it is returned to the law firm that that letter was delivered and the signed AR card is proof of delivery and will be used against you in court.

b) Same applies to the so very convenient "CERTIFICATE OF POSTING " mail .

When the grace period for you to respond is over , they quietly go to court and show proof that an AR registered letter was sent to you as a reminder and you did not bother to defend it and thus convince the court officials and get a judgment against you.

Next another AR registered letter is sent to you asking for damages approved by the court , or just another empty envelope and you discard it once more and this time the white collar crook will go to the court quietly and seek the assistance of the court to seal your property to recover the amount given by the court and soon the court bailiff will be at your door step to execute the order . What happens next ? You frantically call your relatives in disbelief and seek legal advise . You are lost not knowing whats happening.

Anxiety , stress , palpitation , sleepless nights cannot be compensated as this is a reality check . You engage a lawyer , spend a few thousand
s
polishing their pockets for paper work and appeal to the High court to set aside this matter . What is your rights ?

a) You have every right to reject any mail / parcel that comes from unknown sources , be it a debt collection company, law firm or some individual .

b) You have every right to ask the postman or the person delivering it to open the mail and let you see what is inside and the contents of the letter.

c) REJECT it if you are not comfortable or ask them to deliver to a law firm that you know.

d) If you have inadvertently signed and collected the empty AR or empty ordinary registered mail, lodge a police report and also report to the bar council as this will protect you if the matter goes to court .

Eye opener isn't it , crime is beyond house break ins and snatch thefts ,
most of the time thieves get a few hundred
s
BUT here you spend thousands
,
 many hours spent traveling to court or to your lawyers office, not forgetting the stress, anxiety , sleepless nights , etc

These days , the crooks come dressed in suits , so beware and be smart

Do inform your family members, mother in law, grand ma , maid, children , hubby .... NOT ..DO NOT SIGN ON BEHALF OF ANYONE .. let them leave a card, go check at the post office , if not comfortable, just reject it or ask the postman to open and show you what is inside. 










FOR MORE INFORMATIVE MAILS VISIT






Friday, September 20, 2013

தேடிச்சோறு நிதம் தின்று....

 தேடிச்சோறு நிதம் தின்று....
[உள்ளது உள்ளவாறு பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.]





ருத்ரா இ.பரமசிவன்

தேடிச்சோறு நிதம் தின்று....
=======================================


தினமும் செய்திகள் செய்திகள்
துணுக்குகள்
கவிதை மொக்கைகள்
பின் நவீனத்துவ‌
முன் நவீனத்துவ‌
மாயாவாதக் கனவுவாத‌
வார்த்தை ஆலாபனைகள்.

யாரோ ஒரு நடிகை
அங்கம் எல்லாம்
துண்டு துண்டாய் வெட்டப்பட்ட விவரிப்பும்
காவல் நாய்கள்
அந்த மாமிசத்தை மோப்பம் பிடிக்கும்
இராட்சத காமிரா காட்சியும்..
மயிர்குத்திட்டு நிற்கவைக்கும் எழுத்துகளும்...

ஒரு புது மாதிரி
தாடியோ
குல்லாவோ
வைத்துக்கொண்ட‌
சாமியாரின் 
ஆன்மீகக்குடல் உருவிய‌
ஸ்லோக சங்கிலித்தொடர்
வாக்கியங்களும்.....

பங்கு மூலதனத்தில்
கரடியும் காளையும்
கட்டிப்புரண்டு
புழுதிகிளப்பியதில்
கருப்புப்பணங்கள் கூட‌
கை கட்டி வாய்பொத்தி
கும்பாபிஷேகம் பண்ணி
சம்ப்ரோக்ஷணம் செய்து
பொருளாதாரத்தை புள்ளி விவர‌
ஆணி அடித்து ஆணி அடித்து
ஆலவட்டம் போடும்
பத்தி பத்தியான கட்டுரைகளும்....

தேடிச்சோறு நிதம் நின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
சிந்தனைக்குள்
சிதறுகின்ற எரிமலைகளையே
அவித்துப் போடும்
அரட்டைக்கூளங்களும்....

எம்.எல் ஏ சீட்டு.
இல்லாவிட்டால்
எம்.பி சீட்டு
இல்லாவிட்டால்
ராஜ்ய சபா சீட்டு
இன்னும்
மெடிகல் சீட்டு
இஞ்சீனியரிங்க் சீட்டு
என்று
அரசியலின் சாயப்பட்டறைகள்
கழுவி கழுவி ஊற்றிய‌
வாய்க்கால் வரப்பு செய்திகளும்....

மணல் அள்ளிச்செல்லும் 
கொள்ளைகளும்
ரோடுகளில் மக்கள்
மறியல் செய்து மறியல் செய்து
டிவிக்களில்
முகங்கள் மொய்த்த செய்திகளும்....

அணு உலை வேண்டாம் என்று
அடுக்கு அடுக்காய்
ஜனங்கள் குவித்து
தொட்டில்கட்டி குழந்தைகளுடன்
சுருண்டு கிடந்தும்
அணுவின் எலக்ட்ரானுக்குள்ளும்
பிளக்கமுடியாத‌
இனவாத மயிரிழை அரசியலும்
அது சார்ந்த‌
விஞ்ஞான அஞ்ஞான எடுத்துக்காட்டுகள்
குவிந்த செய்திகளும்.....

காவிரியும் முல்லையாரும்
இனி சங்கத்தமிழ் ஒலிக்காது
என்னும்
ஒப்பாரி முழக்கங்களும்
ஒரு சொட்டு கூட தர மாட்டோம்
எனும்
தேர்தல் பருவகால‌
நரம்பு புடைக்கும்
நாக்கு தெறிக்கும்
பேச்சுகளின் ஒளிபரப்பு செய்திகளும்...

கோவில் நடை திறப்பது போல்
நாடாளுமன்ற நடை திறக்கும் போதெல்லாம்
புறக்கணிப்போம் எனும்
ஜெண்டை மேள ஜால்ரா தட்டல் 
ஒலிகளின் தலைநகர்ச்செய்திகளும்

உள்ளுக்குள்ளே
உயிரற்ற மைக்குகளுக்கு
கை கொடுக்கும்
மேசை தட்டல் மழையோசைகளும்...


இன்னும்
இன்னும்
பூனைமயிரில்
புதுக்கவிதைகள் செய்து
காதலின் ரத்த அணுக்களின்
சத்த மீயூசிக்குகளில்
சரித்திரம் படைக்க கிளம்பிய‌
லேசர் அரங்க பட்டைகிளப்பும்
கலைநிகழ்ச்சி செய்திகளும்..

மூச்சு முட்டுகிறது.
செய்திகள் தின்று தின்று..
பாவம்.
கொண்டுவாருங்கள்
யாராவது
ஆக்சிஜன் சிலிண்டரை
நம் ஜனநாயகத்துக்கு..

======================================================ருத்ரா







--
FOR MORE INFORMATIVE MAILS VISIT