Thursday, May 23, 2013
நமது உடல்
நமது உடல்
நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..!
Tuesday, May 21, 2013
அப்பா
அப்பா
பாசத்துடன் அப்பா...
அப்பா...
அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை...
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாட்களில்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...
அப்பா...
அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை...
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாட்களில்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...
Saturday, May 18, 2013
DEEPAVALI IS NOT CELEBARATED BY MONTEITH AYYANKARS
-
"மாண்டியத் அய்யங்கார்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை"
கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கும் மாண்டியாவிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வாழ்பவர்கள் மாண்டியத் அய்யங்கார்கள். இவர்கள் 11 ஆம் நூற்றாண்டில் திருப்பதியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். தென்கலைப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் பேசும் மொழி தமிழ் அதிகம் கலந்த கன்னடம் ஆகும். இதை மாண்டியத் தமிழ் என்பர். (பாலக்காடு தமிழ் போல)
வைணவர்களாக இவர்கள் இருந்த போதும் தீபாவளியைக் கொண்டாடததிற்கு காரணம் கீழ்க்கண்ட நிகழ்ச்சியே .
1790 ல் மைசூர் மகாராணியாக இருந்தவர் ராணி லக்ஷ்ம்மன்னி.அவருடைய பிரதம மந்திரி திருமலை அய்யங்கார்.அவரது தம்பி நாராயண அய்யங்கார். இவர்கள் இருவரது துணையுடன் இழந்த அரியனையை திப்பு சுல்தானிடமிருந்து பெற ஆங்கிலேயர் உதவியை ராணி நாடினார்.இதற்காக ஆங்கிலேயருடன் ஒரு உடன்படிக்கை செய்யப்பட்டது .இதற்கு மூலகாரணமாக மூளையாக இருந்து செயல் பட்டவர் திருமலை அய்யங்கார்.
அப்போது தன் அரியனையை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆங்கிலேயருடன் தீவிரமாக போர் புரிந்து கொண்டு இருந்தவ(ன் )ர் திப்பு சுல்தான் .திருமலை அய்யங்காரின் உடன்படிக்கையைப் பற்றிக் கேள்விப் பட்டவுடன் மிகுந்த கோபம் கொண்ட திப்பு சுல்தான் மாண்டியத் நகரில் இருந்த திருமலை அய்யங்கார் உற்றார் மற்றும் உறவினர்கள் 700 பேரை தீபாவளி தினத்தன்று குரூரமாக வெட்டிக் கொலை செய்தான் (ர்).
விளைவு : மாண்டியத் அய்யங்கார்கள் அவர்களது மூதாதையர்கள் நினைவாக /அஞ்சலி செலுத்தும் முகமாக தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.
FOR MORE INFORMATIVE MAILS VISIT
"பள்ளிகளில் சொல்லித்தராத பாரதியார் பாடல்கள் "
-
FOR MORE INFORMATIVE MAILS VISIT
"பள்ளிகளில் சொல்லித் தராத
பாரதியார் பாடல்கள் "
பொதுவாக பள்ளிகளில் நாம் படித்த காலங்களில் பாரதியார் பாடல்களிலிருந்து சில பாடல்களை மட்டுமே பாடமாக வைத்திருந்தார்கள் .முக்கியமாக நாட்டின் விடுதலை , பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் பற்றிய பாப்பா பாடல்களே அதில் அதிகமாக இருந்தன .அதுவும் ஒரு பாட்டின் எல்லாக் கண்ணிகளையும் பிரசுரிக்காமல் சில குறிப்பிட்ட கண்ணிகளை மட்டுமே பிரசுரித்திருப்பார்கள். ஏனெனில் பாரதியின் எல்லா முகங்களையும் எல்லோரும் பார்க்கக் கூடாதென்பதில் அவர்கள் மிகவும் கவனத்துடன் இருந்தார்கள். இன்றும் அந்த நிலையே தொடர்கிறது.
பாரதி ஒரு தேசியக் கவி மட்டுமல்ல,அவர் ஒரு சிறந்த சீர்திருத்தவாதி. சமூக நீதிக் கவிஞர். சமூக அக்கறை கொண்டவர் . அவரைப்போல வெளிப்படையாகப் பேசி எழுதியவர்கள் யாருமில்லை.அவர் பார்ப்பனர் (அந்தணர்) குலத்தில் பிறந்திருந்தாலும் சாதி நீதியை மிகவும் கடுமையாகச் சாடியவர்.சாதியை ஒழிப்பதில் அவர் காட்டிய தீவிரம் மிகவும் போற்றுதற்குரியது.
பள்ளிகளில் சொல்லித்தராத பாரதியார் பாடல்களில் முதல் பாடலாக , பாரதியார் அவர்கள், " உயிர் பெற்ற தமிழர் பாட்டு " என்ற தலைப்பில் புராணங்களைப் பற்றி எழுதிய பாடல் ஒன்றை இன்று காண்போம்.
"புராணங்கள் "
உண்மையின் பேர் தெய்வம் என்போம் -அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் ;
உண்மைகள் வேதங்கள் என்போம் -பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
கடலினைத் தாவும் குரங்கும் -வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே -தெற்கில்
வந்து சமன் செயும் குட்டை முனியும்
நதியினுள்ளே முழுகிப் போய் -அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த -திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் -ஒன்றில்
உண்மைஎன்றோதி மற்றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் -அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும் -அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி -நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.
( இன்னுமுண்டு )
FOR MORE INFORMATIVE MAILS VISIT
Friday, May 3, 2013
நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
__._,_.___
S
__,_._,___
FOR MORE INFORMATIVE MAILS VISIT
FOR MORE INFORMATIVE MAILS VISIT
Subscribe to:
Posts (Atom)