Thursday, May 23, 2013

நமது உடல்


நமது உடல் 


நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளைப்  பற்றி தெரிந்து கொள்வோம்..! 

கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.

* இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.

* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.

* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.

* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.

* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.

* ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.

* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.

* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.

* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.

* உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.

* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.

* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.

* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.

* பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது. 

தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.

* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

* மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.

* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான். 





FOR MORE INFORMATIVE MAILS VISIT

Tuesday, May 21, 2013

அப்பா

அப்பா 


பாசத்துடன் அப்பா...

அப்பா...


அப்பா...

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம் 
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...



முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...



அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது



உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...



கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது

என்ன நினைத்திருப்பார்..?



லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை...



அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்

அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?



நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..



அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாட்களில் 
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...








Saturday, May 18, 2013

DEEPAVALI IS NOT CELEBARATED BY MONTEITH AYYANKARS



-





"மாண்டியத் அய்யங்கார்கள்  தீபாவளியைக்  கொண்டாடுவதில்லை" 









கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கும் மாண்டியாவிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வாழ்பவர்கள் மாண்டியத் அய்யங்கார்கள். இவர்கள் 11 ஆம் நூற்றாண்டில் திருப்பதியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். தென்கலைப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் பேசும் மொழி தமிழ் அதிகம் கலந்த கன்னடம் ஆகும். இதை மாண்டியத் தமிழ் என்பர். (பாலக்காடு தமிழ் போல)
வைணவர்களாக இவர்கள் இருந்த போதும் தீபாவளியைக்  கொண்டாடததிற்கு காரணம் கீழ்க்கண்ட நிகழ்ச்சியே .


                                                1790 ல்  மைசூர் மகாராணியாக இருந்தவர்  ராணி லக்ஷ்ம்மன்னி.அவருடைய பிரதம மந்திரி  திருமலை அய்யங்கார்.அவரது தம்பி நாராயண அய்யங்கார். இவர்கள் இருவரது துணையுடன் இழந்த அரியனையை திப்பு சுல்தானிடமிருந்து பெற ஆங்கிலேயர் உதவியை ராணி நாடினார்.இதற்காக ஆங்கிலேயருடன் ஒரு உடன்படிக்கை செய்யப்பட்டது .இதற்கு மூலகாரணமாக மூளையாக இருந்து செயல் பட்டவர்  திருமலை அய்யங்கார்.

                                                   அப்போது தன் அரியனையை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆங்கிலேயருடன் தீவிரமாக போர் புரிந்து கொண்டு இருந்தவ(ன் )ர் திப்பு சுல்தான் .திருமலை அய்யங்காரின்  உடன்படிக்கையைப் பற்றிக்  கேள்விப் பட்டவுடன் மிகுந்த கோபம் கொண்ட திப்பு சுல்தான் மாண்டியத் நகரில் இருந்த திருமலை அய்யங்கார் உற்றார் மற்றும்  உறவினர்கள் 700 பேரை  தீபாவளி தினத்தன்று குரூரமாக வெட்டிக் கொலை செய்தான் (ர்).

விளைவு :     மாண்டியத் அய்யங்கார்கள்  அவர்களது  மூதாதையர்கள் நினைவாக /அஞ்சலி செலுத்தும் முகமாக  தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.




FOR MORE INFORMATIVE MAILS VISIT

"பள்ளிகளில் சொல்லித்தராத பாரதியார் பாடல்கள் "



-





"பள்ளிகளில்  சொல்லித் தராத 
பாரதியார்  பாடல்கள் "




பொதுவாக  பள்ளிகளில்  நாம் படித்த காலங்களில் பாரதியார் பாடல்களிலிருந்து சில பாடல்களை மட்டுமே பாடமாக வைத்திருந்தார்கள் .முக்கியமாக நாட்டின் விடுதலை ,  பெண்ணுரிமை மற்றும்  குழந்தைகள்  பற்றிய பாப்பா  பாடல்களே அதில்  அதிகமாக இருந்தன .அதுவும் ஒரு பாட்டின் எல்லாக்  கண்ணிகளையும் பிரசுரிக்காமல் சில குறிப்பிட்ட கண்ணிகளை மட்டுமே பிரசுரித்திருப்பார்கள். ஏனெனில் பாரதியின் எல்லா முகங்களையும்  எல்லோரும் பார்க்கக்  கூடாதென்பதில்  அவர்கள் மிகவும் கவனத்துடன் இருந்தார்கள். இன்றும் அந்த நிலையே தொடர்கிறது.

பாரதி ஒரு தேசியக்  கவி மட்டுமல்ல,அவர் ஒரு சிறந்த  சீர்திருத்தவாதி. சமூக நீதிக் கவிஞர். சமூக அக்கறை கொண்டவர் .  அவரைப்போல வெளிப்படையாகப் பேசி எழுதியவர்கள் யாருமில்லை.அவர் பார்ப்பனர் (அந்தணர்)  குலத்தில் பிறந்திருந்தாலும் சாதி நீதியை மிகவும் கடுமையாகச்  சாடியவர்.சாதியை ஒழிப்பதில் அவர் காட்டிய தீவிரம் மிகவும் போற்றுதற்குரியது.

          பள்ளிகளில் சொல்லித்தராத பாரதியார் பாடல்களில் முதல் பாடலாக ,  பாரதியார்  அவர்கள், " உயிர் பெற்ற தமிழர் பாட்டு " என்ற தலைப்பில் புராணங்களைப் பற்றி  எழுதிய பாடல் ஒன்றை இன்று காண்போம்.

"புராணங்கள் "

உண்மையின் பேர் தெய்வம் என்போம் -அன்றி 
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் ;
உண்மைகள் வேதங்கள் என்போம் -பிறிது 
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம் 
கடலினைத் தாவும் குரங்கும் -வெங் 
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும் 
வடமலை தாழ்ந்ததனாலே -தெற்கில் 
வந்து சமன் செயும் குட்டை முனியும் 
நதியினுள்ளே முழுகிப் போய் -அந்த 
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை 
விதியுறவே மணம் செய்த -திறல் 
வீமனும் கற்பனை என்பது கண்டோம் 
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் -ஒன்றில் 
உண்மைஎன்றோதி  மற்றொன்று பொய்யென்னும்  
நன்று புராணங்கள் செய்தார் -அதில் 
நல்ல கவிதை பலப்பல தந்தார் 
கவிதை மிகநல்ல தேனும் -அக் 
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம் 
புவிதனில் வாழ்நெறி காட்டி -நன்மை 
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.



       (  இன்னுமுண்டு )  




FOR MORE INFORMATIVE MAILS VISIT















Friday, May 3, 2013

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்






 நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
 



 





 

 

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்  


 

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ….!



வசதியாகத்தான் இருக்கிறது மகனே


நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்


பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ


வெளியேறிய போது , முன்பு நானும்  


இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு


என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்


கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி


ஞாபகத்தில் எழுகிறது!


முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து


நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட


அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி


எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!


இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க


நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான


மாதத் தொகையை மறக்காமல்


அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது


நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்


உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்


படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன்


எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!


இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை


என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே


செலவு செய்கிறாய் ஆயினும் உனக்கும் எனக்கும்


ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு


வாழ்க்கை இதுதானென்று !


நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு


உறவுகள் இதுதானென்று!


இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது..  
எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில்
அடங்கியுள்ளது..
 





__._,_.___


__,_._,___





--
FOR MORE INFORMATIVE MAILS VISIT



--
FOR MORE INFORMATIVE MAILS VISIT