Wednesday, November 5, 2014

தொடரும் ஆனந்தத் தொல்லை --கண்டிப்பாக சிரிப்பதற்கு மட்டும் - மாத்தி யோசிச்சதில் வந்த ஆராய்ச்சி முடிவுகள்


Subject: தொடரும் ஆனந்தத் தொல்லை --கண்டிப்பாக சிரிப்பதற்கு மட்டும் - மாத்தி யோசிச்சதில் வந்த ஆராய்ச்சி முடிவுகள்














பழ மொழிகள்     மாத்தி யோசித்த போது



1.​இமைக்குற்றம்  கண்ணுக்குத் தெரியாது .

  a. சசி குற்றம் ஜெயாவுக்குத்  தெரியாது.

 b. கனி குற்றம் கருணாவுக்குத் தெரியாது.

2​.குதிரை குணம் அறிந்து அல்லவோ கடவுள் கொம்பு கொடுக்கவில்லை .

  சாமி குணம் அறிந்து அல்லவோ  மோடி மந்திரி பதவி கொடுக்கவில்லை .

3.சீதை பிறந்தது இலங்கை அழிய.

   கனி பிறந்தது கழகம் அழிய .

4.பகையாளிக்கு பருப்பிலே நெய் விட்டது போலே.

    ராஜபட்சேவுக்கு பாரத ரத்னா  கொடுப்பது போலே.

5.கை கொடுத்துக் கொண்டே கடையானியை புடுங்குகிறான்.

  ஆதரவு கொடுத்துக் கொண்டே ஆட்சியை கலைக்கிறான் .

6.கண்டால் காமாட்சி நாயக்கர் ,காணாவிட்டால் கம்மனாட்டி நாயக்கர் .

  கல்யாணக் கூட்டத்தில் கருணா சாணக்கியர் ,

  கட்சிக்  கூட்டத்தில்  கருணா  சகுனி .

7.கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம் .

  தோற்கிற தொகுதி கூட்டணி கட்சிக்கு . 


8 .அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்து சிரங்கும் ஆகாது .

     தேதிமுக கூட்டும் வி சி க கூட்டும் பா ம காவுக்கு ஆகாது .

9.செய்த வினை செய்தவர்க்கு வரும் .

 ஜெயத்திற்கு செய்தது கனிக்கு வரும் .

10.திருப்பதியில் மொட்டை அடித்தது போதாமல்
 
   ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய் சிரிக்க வந்தான் .

    2 -ஜியில்  கொள்ளை அடித்தது போதாமல்

     ஏர்செல்லிலும் சிரிப்பாய் சிரிக்கிறது .



     

மேலும்

நீ நீ நீ நீ நீ .............ளும்


அன்புடன் 

தேவசுந்தரம்










                                                                          























No comments:

Post a Comment