Subject: தொடரும் ஆனந்தத் தொல்லை --கண்டிப்பாக சிரிப்பதற்கு மட்டும் - மாத்தி யோசிச்சதில் வந்த ஆராய்ச்சி முடிவுகள்
1.இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது .
a. சசி குற்றம் ஜெயாவுக்குத் தெரியாது.
b. கனி குற்றம் கருணாவுக்குத் தெரியாது.
2.குதிரை குணம் அறிந்து அல்லவோ கடவுள் கொம்பு கொடுக்கவில்லை .
சாமி குணம் அறிந்து அல்லவோ மோடி மந்திரி பதவி கொடுக்கவில்லை .
3.சீதை பிறந்தது இலங்கை அழிய.
கனி பிறந்தது கழகம் அழிய .
4.பகையாளிக்கு பருப்பிலே நெய் விட்டது போலே.
ராஜபட்சேவுக்கு பாரத ரத்னா கொடுப்பது போலே.
5.கை கொடுத்துக் கொண்டே கடையானியை புடுங்குகிறான்.
ஆதரவு கொடுத்துக் கொண்டே ஆட்சியை கலைக்கிறான் .
6.கண்டால் காமாட்சி நாயக்கர் ,காணாவிட்டால் கம்மனாட்டி நாயக்கர் .
கல்யாணக் கூட்டத்தில் கருணா சாணக்கியர் ,
கட்சிக் கூட்டத்தில் கருணா சகுனி .
7.கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம் .
தோற்கிற தொகுதி கூட்டணி கட்சிக்கு .
8 .அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்து சிரங்கும் ஆகாது .
தேதிமுக கூட்டும் வி சி க கூட்டும் பா ம காவுக்கு ஆகாது .
9.செய்த வினை செய்தவர்க்கு வரும் .
ஜெயத்திற்கு செய்தது கனிக்கு வரும் .
10.திருப்பதியில் மொட்டை அடித்தது போதாமல்
ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய் சிரிக்க வந்தான் .
2 -ஜியில் கொள்ளை அடித்தது போதாமல்
ஏர்செல்லிலும் சிரிப்பாய் சிரிக்கிறது .
மேலும்
நீ நீ நீ நீ நீ .............ளும்
அன்புடன்
தேவசுந்தரம்
FOR MORE INFORMATIVE MAILS VISIT
No comments:
Post a Comment