Monday, July 21, 2014

நிதர்சனம்




வாய்ப்பாட்டை மனப்பாடம்
செய்யப் பிடிக்காமல்
பள்ளியை விட்டு ஓடியவன்
சாப்பாட்டை மனப்பாடம்
செய்து ஒப்பிக்கிறான் சர்வராக


ஜலதோஷம் என்பது
பொண்டாட்டி வீட்டு சொந்தம் மாதிரி
எப்போ வரும்னு தெரியாது. போகவைக்கவும் முடியாது.


ஏதோ ஒரு புரியாத தேவ மொழியில்
என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறது குழந்தை
வளர்ந்து தொலைத்த வருத்தத்தோடு
கேட்டுக் கொண்டிருக்கிறேன்


நம்மிடம் தைரியம் இருந்தால் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையையும்
சமாளிக்கலாம். எல்லா இக்கட்டான சூழ்நிலையையும்
ஒரு சிறு புன்னகையால் சரி செய்து வெற்றி காணலாம் தோழர்களே தோழியரே.


புதிய நண்பர்களையும் உறவுகளையும் சேர்த்துக் கொள்.
பழைய நண்பர்களையும் உறவுகளையும் இழந்து
​விடாதே ​.





FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment